என் கல்லூரி விடுதி...

என் கல்லூரி விடுதி...

-- அந்த முதல் நாள்

நரகமென எண்ணி
விடுதியின் வாசலை
பல யோசனைகளுக்கு
பின்னர் மிதித்தேன்...

தகவல் பலகையில்
எனக்கான அறையை
பார்த்துவிட்டு....
பல எண்ணங்களுடன்
எனது அறையை அடைந்தேன்...

எனக்கு முன்
சிலர் வந்துவிட்டார்கள்
என்பதை
அழகாக காட்டிக் கொடுத்தது
செல்புகளில்
வைக்கப்படிருந்த
அவர்களின்
பெட்டிப் , படுக்கைகள்...

எனக்கென
இருந்த
செல்பில்
என்னுடைய பொருட்களையும்
வைத்துவிட்டு ...
சில அறிவுரைகளை
கூறியபடி, அப்பாவும்
"போய்ட்டு வரேண்டா"
என்றபடி
விடை பெற்றார்...

5 மணி நேரம் தான்
பயணம்,,
ஏன் "விடுதி" என்று
மனதில் எண்ணிக்கொண்டவாறே
அரைகுறை மனதுடன்
தலையசைத்தேன்...

இரவு 8 மணிக்கு
ஒவ்வொருவராக ...
அனைவரும்
வந்து சேர்ந்தார்கள்
என் அறைக்கு...

மொத்தம் 8 பேர்
யாரும் யாரிடமும்
பேசாமல்
அன்றைய இரவு
கழிந்தது...

மறுநாள்:-
உங்ககிட்ட பேஸ்ட் இருக்கா?
நான் மறந்துட்டேன்
என்றவாறே
ஒரு "நண்பன்" கேட்டான்..
நானும் என்னிடம்
உள்ளதை
எடுத்துக் கொடுத்து
தங்களைப் பற்றி
பகிர்ந்து கொண்டோம்...
அன்றைய இரவே
ஒவ்வொருவரும்
பழகிவிட்டோம்..

"நீங்க , வாங்க" தொடர்ந்தது..
ஒரு வாரம்
கழிந்த நிலையில்
நீங்க வாங்க "நீ , வா " என
மாறியது..

அப்புறம் என்ன
"மாமா , மச்சான் " தான்...
வெள்ளிக் கிழமை மாலை
லீவ் லெட்டரில்
சைன் வாங்கி விட்டதை
MLA சீட்
வாங்கி விட்டதை போல
சந்தோசப் பட்டுக்கொண்டு
புறப்படும் போது...
உலகையே
வாங்கி விட்டதாய் உணர்வோம்...
புது பேண்ட்,
புது சட்டை விகிதம்
பேக் முழுவதும்
அழுக்குத் துணிகளுடன்
ஊர் செல்லும் போதோ
ஒய்யார வரவேற்பு..

ஏய்.. எப்படா வந்த .. என்று...
வெள்ளிக் கிழமை இரவுக்கும்
திங்கள் கிழமை காலைக்கும்
அரை மணி நேரம் தானோ
என நினைக்கும் அளவுக்கு
சட்டென பறந்தோடும்
அந்த இரண்டு நாட்களும்...

மீண்டும் திங்கள் காலை
தேய்த்த துணி மணிகளுடனும்
தூக்க முடியாத அளவு
தின்பண்டங்களுடனும்
மீண்டும் விடுதி
நோக்கி பயணம்...

பலமுறை பார்த்த
படங்கள் - ஆயினும்
சலிக்காமல் பார்க்கத் தூண்டும்
சனிக்கிழமை இரவு...
ரஜினி,கமல்,அஜித்,விஜய்,
தனுஷ்,சிம்பு ,,, ஏன்
பவர் ஸ்டார் க்கும் கூட
ரசிகர்கள் இருப்பதை
சனிக்கிழமை இரவுதான்
எங்களுக்கு காட்டிக் கொடுக்கும்...

விடுதியின் சுற்றுச் சுவர்
பாளையங்கோட்டை
சிறைசாலையை
நியாபகப்படுத்தும்..
இங்கேயும்
வார்டன்கள் உண்டு...
ஆனால்..,,
கைதிகள் இல்லை...

சிறு தவறு செய்தால் கூட
"பாட்ஷா" படத்தை
நியாபகப் படுத்தும்
கொடிக் கம்பத்தில்
வைத்துதான் விசாரணை...

மெஸ் சாப்பாடுகளை
"குறையாக சொல்லும்"
சில நண்பர்கள் இருந்தாலும்
அதை "வெளுத்துக்கட்டி"
ஒரு ரவுண்டு விடும்
சில சாப்பாடு
ஜாம்பவான்களும் உண்டு...

படிப்பில் சிலர்
அரட்டைக்கு பலர்
படிப்பிற்கும் , அரட்டைக்கும் சிலர்
என ,,
பலவகையான
பறவைகளைக் கொண்ட
எங்கள் விடுதி...

ஒரு "மாணவச் சரணாலயம்"
அறை அறையாக வரும்
"தி ஹிந்து" ஆங்கில நாளிதழை
மடிப்புக் கலையாமலும்..
விடுதிக்கே ஒன்று
என வரும்
"தின தந்தி " நாளிதழை
மடிப்புகளாலும்
கலை இழக்கச் செய்வோம்...

சாப்பாடு போட்டி,
பாட்டுப் போட்டி.
விளையாட்டுப் போட்டி,
கலை நிகழ்சிகளுக்கும்
பஞ்சமில்லை எங்கள்
விடுதியில்...

நட்பை மட்டுமல்லாது
நல்லவற்றையெல்லாம்
கற்றுக்கொடுத்த
எனல் கல்லூரி விடுதி
என்றும் எங்களுக்கு
"ஆலயம்" தான்.....

இன்னும் தொடரும்...
காத்திருங்கள்
உங்கள் தோழன் விக்னேஷ்

Category: 1 comments

ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்- R.Parthiban's Kirukkalgal


parthiban's kirukkalgal kavithaigalகிறுக்கல்களில் இவை நான் ரசித்த சில கவிதைகள் மட்டுமே.முழுதாக படிக்க தயவுசெய்து கடைகளில் விலைக்கு வாங்கி படியுங்கள்.


Parthiban's Kirukkalgal-மிகவும் ரசித்த கவிதைகள்




 




என்னை நேசித்த
முதல்
கவிதை!!!
 
      






 “ நினைச்சா பொறையேறும்”
 நிஜமாயிருந்தா...

 நீ செத்திருக்கனுமே
இந் நேரம் 





நீ அழிக்க
காத்திருக்கிறது
ஈர மணலில்
என் பெயர்.








கிழக்கே போகும் ரயிலில்
நான் போகும்போது
மேற்கே செல்லும் தந்திக்கம்பமாக
எதிர்திசையில் நீ சென்றால்
எங்கு...எப்போது...சந்திப்பது?
                   

                   

ருகிப்போகவே
விரும்புகிறேன்
சுடராய்
நீ இருக்க...!!!















அழுதுகொண்டே
இருப்பேன்
   நீ
            அணைக்கும்வரை....!!!












விதை முளைக்க
நீர், நிலம்,ஒளி
எல்லாம் வேண்டும்
கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு...!!!











உள்ளுக்குள்
நீ
இருப்பதால்
யிரோடு
 நான்
இருக்கிறேன்..!












யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக
கனவனாக..
ஏன் கடவுளாக
நான் மட்டுமே
உன் காதலாக...!!!


















விலக
விலக
புள்ளிதானே..
நீ
எப்படி
விசுவரூபம்?










மெய் மறந்து

பொய் சொன்னாயா?
என்னை
காதலிக்கிறேன் என்று.












படைத்தல்
காத்தல்
அழித்தல்
கா..த...ல்..!!!













கண்னைத் திற
உலகம் தெரியும்

கண் மூடு
நான் தெரிவேன்.















பார்த்தல் பேசுதல
அணைத்தல்,
சுவைத்தல்
நீக்கியும்
நினைத்தல், நீடித்தல்
.....காதல்!

























எரித்தாலோ
புதைத்தாலோ
புதையாமல்
எரிந்துகொண்டிருக்கும்
உன்
 நினைவுத் தீ.!


















 நம்
நினைவில்
நான்..!!!
















என்னை கிறுக்கனாக்கிய
கிறுக்கியே....................................
................................................................................
................................................................................
புரியுதாடி?


















                  நான் .
               . யானாலும்
                  நீ மட்டும் ,
                                         




















கிழக்கில் விளக்காய்
நீ சிரிக்க

மேற்கில் இருட்டாய்
 நான் சிப்பேன்!















அதெப்படி..
உள்ளில் இருக்கும் உனக்கு
உருவம் மட்டும்
தொலைவில்...!!!


















அடியே..!!
’Total அம்னீசியா’ உனக்கு
‘Selective அம்னீசியா’ எனக்கு
நீ மட்டும்
நினைவில்.





















என்ன எழவு விஞ்ஞானமோ?
என் Chest X-ray ல்
ன் Photo.
























ரோஜா
மோதி
முள்ளுக்கு எலும்பு
முறிவு..!




















காதல்
கல்யானத்தில் முடியாது

ஆமாம்,
என் காதல்
ன் கல்யாணத்தில் முடியாது.


நன்றி
கிறுக்கல்கள்
ரா.பார்த்திபன்.









Category: 22 comments

கவிதை ! விளக்கம் !

"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சாப்பாடு தேடவே வாழ்ந்து - சாப்பிட்டு

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வெட்டிக் கதைப் பேசிக்கொண்டு

வாடித் துன்பமிக உழன்று - பிறர்
இல்லாததை நினைத்து வருந்தி

வாடப் பலசெயல்கள் செய்து - நரை
பிறருக்கு தீங்கிழைத்து

கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
நரை வந்த கிழவனாகி

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
செத்துப் போகும்

வேடிக்கை மனிதரைப் போலே -நான்
உண்மை அறியா ! மனிதரைப் போலே

வீழ்வே னென்று நினைத்தாயோ
நானும் இந்த மாய வழையில்வீழ்வே
என்று நினைத்தாயோ

........................................
தேடிச் சோறு நிதந்தின்ரு-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ
........................................
-மாகவி பாரதி
Category: 0 comments

திருவள்ளுவர் பெருமை











 
 
 
பொய்யா மொழித் தந்த
தெய்வப்புலவரின்
பொன்னடிப்போற்றி
வணங்கி வாழ்த்துகிறேன்

சூரியனே உன் புகழ்ப்பாட
திக்குச்சி நான் முயன்றேனே
சமுத்திரமே உன் புகழ்ப்பாட
சிறுத்துளி நான்
கவிதை வடித்தேனே..

தமிழினத்தின் ஆதி குருவே
மானிடம் தலைத்திட

தன்னையே உரமாக்கிய
பெருநாவலரே

ஆயிறத்து முன்னூற்று முப்பது
குறற்பாவில்
பிரபஞ்சம் முழுவதும் அளந்தவறே

ஒற்றை வரியில்
தத்துவமும்
ஏழுச் சொல்லில்
ரகசியமும்
மனித இனத்துக்குத் தந்தவறே

சிறுத்துளிக்குள் ஒரு கடலாய்
ஒவ்வொரு வரியிலும்
அர்த்தங்கள் , கருத்துக்கள் , ஞானங்கள்
ஆழ்ந்த தத்துவங்கள் சொன்னவறே

ஆண்டி முதல் அரசன் வரை
போகி முதல் யோகி வரை
அனைவருக்கும் ஒருப் பாடம் சொல்லி

அன்பும் , பன்பும் , ஒற்றுமையும்
மனித குளத்தின் வேர்கள் - என்று
வாழ்ந்து செளித்திட மனித இனம்
பாடி பகன்ற பாவலரே

காற்று வீசும் திசைகளெல்லாம்
தமிழன் பெருமை மனம் வீச
மண்ணில்த் தோன்றிய
ஞான விருற்சகமே !

தமிழினம் முற்றிலும் அழிந்தாலும்
அழியாத பெருமை பெற்றவரே
உலகம் சுற்றும் நாள் வரையில்
காற்றும் உன் புகழ்ப்பாடும்

வாழ்க தமிழ்
வழர்க தமிழ் மக்கள்
ஓங்குக திருவள்ளுவர் பெருமை
Category: 0 comments

Anna University May/June 2014(2008 Regulation) Time table

you can download from here.....


Anna University May/June 2014(2008 Regulation) Time table
Click Here To download.

Category: 0 comments

எனது பிரிவு உபசார விழாவில் நான் எழுதி வாசித்த கவிதை...



எனது கல்லூரி பிரிவு உபசார விழாவில் நான் எழுதி
வாசித்த கவிதை...(இறுதி ஆண்டு மாணாவனாய் என்னை மாற்றிக் கொண்டு...)

இந்த கவிதை மேடை  என்னால் மறக்கமுடியாத நிகழ்வு......
---------------------------------------------------------------------------------------------------------------    அ.விக்னேஷ்



அன்று நாம் நினைத்திருக்க மாட்டோம்
கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில்
நமக்குள் இருந்த பயமும் தயக்கமும்,
இன்று, கடைசி நாள் பிரிவில்
கண்ணீரும் ஏக்கமுமாய் மாறும் என.

அன்று யாரென்றே தெரியாமல்,
பேசவே தயங்கிக் கொண்டிருந்த நம்மை
அருகருகே அமர வைத்த காலம்,
இன்று இதோ ந்துவிட்டது, மனதால் நெருங்கி
பிரிய மனம் இல்லாதவர்களை
ஆளுக்கு ஒரு மூலையாய் துரத்தி விட.

அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்த
நமது கல்லூரி பயணம், நம் மனங்களில்
விட்டுச் சென்றுள்ளது
பல பசுமையான நினைவுகளையும்
சில மறக்க முடியாத ரணங்களையும்.

சில குறும்பானகாரணங்களாலும்,
காரணமே இல்லாமலும்
நாம் வைத்த செல்ல பெயர்களால்
மறந்தே போனோம் பலநிஜ பெயர்களை.
இனி,யாருமில்லை அப்பெயர்களைச்
சொல்லி கொஞ்சலாகநம்மை அழைக்க‌.

பல நாட்கள் அவகாசம் இருந்தாலும்
கடைசி நாள் காலையில்,
முதல் இருக்கை மாணவிகளிடம் இருந்து
கடன் வாங்கி, அவசர அவசரமாய்
எழுதி முடித்து மதியத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்ட
ஒப்படைப்புகள் எல்லாம், சாம்பலாகின்றனஇன்றோடு.

காலையிலேயே திறக்கப்பட்டு இடைவேளைக்குள்
காலி செய்யப்பட்டுவிடும் நம் உணவு டப்பாக்கள்.
எனினும்,ஒரு போதும் நாம் உண்டதில்லை,
நம் வீட்டு உணவுகளை மட்டும்.

ஒவ்வொரு செமஸ்டர் எழுதும் போதும்
முடிவு செய்வோம்.அடுத்த செமெஸ்டருக்கு,
முதலில் இருந்தே படிக்க ஆரம்பிப்ப தென்று.
இதோ வந்து விட்டது கல்லூரியின் இறுதி நாள்.
படித்தும் முடித்து விட்டோம் ஒரு வழியாக...

கல்லூரியின் தயவால் வெற்றி பெற்ற காதல்கள்,
இடையில் முறிந்து போன சிலகாதல்கள்,
விடை தெரியமாலே போன காதல்கள்,
காதலின் பெயரில் நடந்த சிலலீலைகள்,
எனஎல்லாம் முடிகின்றன இன்றோடு.

இனி இருக்கப் போவதில்லை,
கடைசி இருக்கை அரட்டைகளும்,
வெள்ளிக்கிழமை பிரியாணிகளும்,
சில்லரைகளை மட்டும் வைத்துக்
கொண்டு கேண்டின் செல்வதும்,
தோழியின் தந்தை மரணத்திற்கு
நாம் எல்லோரும் அழுததும்,
கல்லூரிப் பேருந்து பயணங்களும்,
'கேக்' பூசிய பிறந்த நாட்களும்,
தேர்வுகளில் தோள் கொடுத்த நட்பும்,
பொய் காரணங்கள் கூறி எடுக்கப்பட்டவிடுப்புகளும்,
தேர்வு முடிவுகளுக்கான பயங்கலந்த காத்திருப்புகளும்
இன்னும் பட்டியலுக்குள் அடங்காத பலவும்….

இது நிரந்திர பிரிவில்லையே!’ ,
எப்படியும் எல்லோரும் தொடர்பில்
தானே இருக்கப் போகிறோம்,
என ஒருவரை ஒருவர் தேற்றினாலும்
தவிர்க்க முடியவில்லை
விழிகளின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீர்த் துளிகளை...

இன்று எங்களுக்கு
பிரிவு உபசார விழா
இது நாங்கள் கல்லூரியில்
கலந்து கொள்ளும் கடைசி விழா

இக்கால இயந்திர உலகத்தில்
இந்த இளைஞர் இஞங்கிகளுக்கு
இளங்கலை மட்டும் போதாது
முதுமையை மனதில் கொள்ளாமல்
முதுகலையையும் முடித்து விடுங்கள்.

பள்ளிப் பருவத்தில் இருந்து
பட்டப்படிப்பிற்கு
படையெடுத்து வந்தோம்
இனி பட்டமும் பெறுவோம்
படித்தவன் என்று
இனி நட்டமும் பெறுவோம்
நல்ல நண்பனை இன்று

எங்கள் மீது பாயும் கேள்விகளுக்கு
நங்கள் கேலி செய்யாமல்
பளிச்சென்று பதில் கூர
நாங்கள் பக்குவமும் அடைந்து விட்டோம்.

முதலாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டும்
நாங்கள் முயற்சி செய்தோம்
இன்றாவது வெளியில் சென்று
மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று
மூன்றாம் ஆண்டில் மூளை சொன்னது
விரைவில் நீ  விவாகரத்து வாங்கி
வீட்டிற்கு சென்று விடுவாய் என்று.

கல்லூரி காலத்தின்
கடைசி காலத்தை நினைத்து
எங்கள் கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்தவில்லை
உச்சிமுதல் பாதம் வரை
உடலே கண்ணீர் சிந்துகிறது
வியர்வையாக
இனி நாமும் காலாவதியான மாணவர்கள்தான்
கல்லூரி மாணவர்கள் என்ற நிலையிலிருந்து.

இனி இந்தக் கல்லூரியை
கடக்கும் போதெல்லாம்
 நாங்கள் பீறங்கி போல்
பீரிட்டு அழமாட்டோம்.
எங்கள் கண்களில்
கண்ணீர் அலைகள் மட்டுமே பாயும்
அதை தடுக்க அவ்வபோது
எங்கள் கைகளே அனைகட்டுகளாகும்.

அனைவரின் அன்பு ,
அரவணைத்த அன்பர்கள்,
ஒருதலை காதல் ,
ஒன்று சேராத காதல் ,
ஒவ்வொருவருடனும் மோதல்,
எதிர் பாரத சண்டைகள் ,
எப்போதும் விளையாட்டு ,
நண்பனின் சாப்பாடு ,
இனிமை தராத இன்ட்ரெனல்,
வரண்டாவில் ஓட்டபந்தயம் ,
வகுப்பரையில் வாய்த்தகராறு,
அடிக்கடி அடித்து கொள்ளுதல் ,
ஆக்ரோஷ சப்தமிடுதல் ,
நாற்காலி மீது நடனம் ,
உடனடி வெளிநடப்பு ,
உண்மையை மறைத்தல் ,
மறந்துவிட்ட மதிய உணவு,
திறக்கப்படாத புத்தகங்கள் ,
தினந்தோறும் கொண்டாடங்கள் ,
கலகலப்பான கடைசிபெஞ்சு ,
கவலை இல்லாத வாழ்க்கை ,
அனைத்தையும் அனுபவித்து ,
இளமையை இழந்து ,
முதுமைக்கு முற்றுபுள்ளி வைக்கும் போது
ஜன்னலுக்கு இமை திறந்து
இருக்கையில் அமர்ந்து இமைகளை மூடி
இதமான காற்றில் இனிமையான நிகழ்வுகளை
அமைதியாக அசை போடும் தருவாயில்
அடிக்கடி வந்து செல்லும்
இழந்துவிட்ட இளமை பருவமும்
கடந்து வந்து கல்லுரி காலமும்.

நம் நான்கு வருட காலம்!
நம் விடை பெற்று சென்றாலும்,
ஒவ்வொரு மேஜையும் கூறும்,
நாம்  தூங்கிய தூக்கத்தையும்,
கிறுக்கிய  கிறுக்கல்களையும்!

நம் டிபார்ட்மென்ட் வாயிலிலுள்ள
திண்டு,கதை கதையை சொல்லும்,
நம் தோழர்களின் மாலை அரட்டைகளையும்,
அவர்களின் சிறு சிறு சேட்டைகளையும்!
நம் செமினார் அரை நினைத்து கொண்டே இருக்கும்,
நாம் வைவாவில் விழித்து கொண்டிருந்ததையும்,
இன்போசிஸ் மூலம் ஆடிய ஆட்டங்களையும்!

ஒவ்வொரு கல்லும்
நம் கல்லூரி நட்பை நினைவு படுத்தும்!
காலங்கள் பல கடந்தாலும்,
உயிருடன் இருக்கும்,
நம் பசுமையான நட்பு!
இந்த டிபார்ட்மென்ட் இருக்கும்வரை!

அறியாமையால் செய்த இன்னல்கள் பல!
அறிந்தே செய்த சிக்கல்கள் பல!
எல்லா தருணமும் அன்று வலித்தாலும்,
இன்று இனிக்கிறது!
ஏதேனும்,
மனங்களை வருத்தினாலும்,
கண்களை கலங்க செய்தாலும்,
இதுவே தருணம்
மன்னிப்பு கேட்க அல்ல!
மனங்களை புரிந்து கொள்ள!
இந்த கல்லூரி குடும்பம் என்றும்
நல்லதொரு குடும்பமாய்
நட்புள்ளமுடன் இருக்கும்...
நம் கடைசி மூச்சு வரை அல்ல ....
நட்புறவின் மூச்சு நிற்கும் வரை...


இனிக்கின்ற நினைவுகளும் கனக்கின்ற நாளிது
உளம்வென்ற நட்பினையும் பிரிக்கின்ற நாளிது
ஒளிநின்றக் கண்களிலும் வியர்க்கின்ற நாளிது
பிரிவென்ற பெருந்துயரம் களம்வென்ற நாளிது

விடைபெறும் நேரம்
எதிர்நோக்கவில்லை நாமும்
படித்த பாடங்கள் கண்ணீரில் கரைந்து விட
பேசிய வார்த்தைகள் மனதிற்குள்ப் புதைந்து விட
சிரித்த சிரிப்பொலிகள் வகுப்பறையில் எதிரொலிக்க
இன்புற்றத் தருணங்கள் கண்மணிக்குள் புதைந்து விட
பிரிந்து செல்கின்றோம்
நினைவுகளின் வலிகளோடு.....

நட்பே!
நட்பின் ஆழத்தை
சந்தித்த நாம்
வாழ்கையின் ஆழத்தை
சந்திக்க
விடை பெறுகிறோம்.

கல்லூரி வாழ்வில்

அன்பை மையப்படுத்தி

நட்பை முன்னிலை படுத்தி

ஆற்றலோடு வாழ்ந்த எங்களுக்கு

பிரிவு என்னும் பெரும் சோகம் !!

இன்பமான பயணம்

நின்று போவதால் அதிர்ச்சி !!

காலம் என்பது எங்களை

பிரிக்க வந்த எமன்

இப்பொழுது பிரிகிறோம் நாங்கள்

நம்பிக்கை உண்டு பாருங்கள்

மீண்டும் சிந்திப்போம்

நிச்சயம் ஒரு நாள் ..!!!
--
                                                   

                                                          ----அ.விக்னேஷ்