என் காதலே..என் காதலே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMc44gQvcRsAUGMCwCuSPk6ZrbxZXFkMruIFCBCHHsihv1DZ8IPBc7stfUtTVcI45bMYCElEqQyh7GVG_2l5UHmEDZsLqS4a7Bogcp06hG360f9VnKUteCt_BOszjEHeFOQkkOEE9ss5r7/s320/p1010524a.jpg
உன் விழிக்குள் இமையாக
நான் கொண்ட காதல்..
உன்னை நான் உணர்ந்த
நாள்..என்னை நான் மறந்த நாள்..

நீ எனக்கு தந்த முதல்
முத்தத்தை இன்றும்
சேமித்து வைத்துள்ளேன்..
என் காதலின் புனிதமான
சின்னமாய்..!

காதலினால் ஏற்பட்ட
காயங்களை அழிப்பதற்கு
கண்ணிரை செலவழிக்கிறேன்..
ஈட்டியாய் உன் நினைவுகளை
என் இதயத்தில் பாய்த்து விட்டாய்..
சிலுவைகலாய் உன் நினைவுகளை
சுமந்து கொண்டு உயிரோடு
நான் இறந்து விட்டேன்...!

நான் இல்லாமல் நீ
இருப்பாய்..ஆனால்
நீ இல்லாமல் என்றும்
நான் இல்லையடி..!
Category: 1 comments

1 comments:

Unknown said...

Tharamaana onnnu 💙

Post a Comment