நீ பறித்த ஒரு பூ!


நீ பறித்த ஒரு பூ!


நீ என் இதயத்தை பூ என்று சொன்னாய்!புரியவில்லை அன்று!புரிந்துகொண்டேன் இன்று! நீ என் இதயத்தை பறித்து சென்ற போது!



Category: 0 comments

படித்ததில் பிடித்தது பாகம் -2


மழை கொண்ட கண்ணீர்


சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன் கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள் நீ நனைகிறாய் என்று!!!


பிரிவு


உடல்களுக்கிடையே தொலைவை 
அதிகரித்து 

மனங்களை நெருக்கமாக்கும்ஒரு பாலம்




முத்தம்

நான் எதிர்பாராத நேரங்களில்
அவள் தரும் - முத்தம்
எனக்கு ஆஸ்கர்

Category: 0 comments

என் காதலி


என் காதலி


நித்தம் நித்தம் என்னுள்ளே
நிம்மதி தந்து போனவளே!
சித்தம் மொத்தம் என்னுள்ளே
சிலையாய் வந்து நின்றவளே!
கலைகள் மொத்தம் கற்றுண்டு
கண்ணடி வித்தை செய்தவளே!
எந்தன் கவிதை நீ கேட்டு
நில்லடி கொஞ்சம் என்னவளே!
பாலை மணல்கள் பறந்தோட
காற்றும் கொஞ்சம் அனலாட
நினைவில் நீயே விளையாட
எந்தன் நாவும் உன் கவிபாட
கேளடி கொஞ்சம் என்னவளே!
என் நெஞ்சமதில் நீ வந்து
தஞ்சமதை நான் தந்து
பஞ்சமில்லா பாரினிலே
கஞ்ச முத்தம் தந்தவளே!
மிச்சம் எப்போ என்னவளே!
உன் பாதம் பட்ட வாசல்படி
பூக்கள் கொஞ்சம் கேட்டதடி
பூக்கள் அதை நான் தூவ
புன்னகையில் பூகூட
பூப்பெய்தி விட்டதடி!
Category: 0 comments

படித்ததில் பிடித்தது


காதல் அல்ல


எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்
விக்னேஷ்



காதல் விளையாட்டு


இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.


மௌனமாக பேசுகிறேன்..


கொஞ்சம் நேரம்
பேசுவாளா என்று
என் மனம் துடிக்கிறது
ஆனால்...
அவள் மௌனமாகவே
இருந்து என்னை
ஊமை ஆக்கி விட்டாள்
நானும் மௌனமாகவே
பேசுகிறேன் அவளுடன்...!


நான் விட்ட அம்பு


அவளின் இதயத்தை துளைக்க
எய்தேன் காதல் அம்பை
இலக்கில்லாமல் திரும்பி
வந்து தாக்கியது என் இதயத்தை
அதிர்ச்சியடைந்தேன் பின்
ஆனந்தமடைந்தேன் அவள்
இதயத்தை ஏற்கனவே
என்னிடம் தந்து விட்டால்
என்று அறிந்தபோது.


முரட்டுக் காதல்


என்னவளே என் கண்ணிமையை
வெட்டிவிட்டேன் உன் வருகையை
கண் சிமிட்டாமல் பார்ப்பதற்கு அது
தடையாய் இருப்பதால்!

Category: 0 comments

அம்மா...

**அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!*





அம்மா...

எழுத வார்த்தைகள் இல்லாமல்

தொடங்குகிறேன்...!!



பருவம் வரை பக்குவமாய்


Category: 0 comments