கிறுக்கல்களில் இவை நான் ரசித்த சில கவிதைகள் மட்டுமே.முழுதாக படிக்க தயவுசெய்து கடைகளில் விலைக்கு வாங்கி படியுங்கள்.
Parthiban's Kirukkalgal-மிகவும் ரசித்த கவிதைகள்
என்னை நேசித்த முதல் கவிதை!!! |
நீ அழிக்க
காத்திருக்கிறது
ஈர மணலில்
என் பெயர்.
கிழக்கே போகும் ரயிலில்
நான் போகும்போது
மேற்கே செல்லும் தந்திக்கம்பமாக
எதிர்திசையில் நீ சென்றால்
எங்கு...எப்போது...சந்திப்பது?
உருகிப்போகவே
விரும்புகிறேன்
சுடராய்
நீ இருக்க...!!!
அழுதுகொண்டே
இருப்பேன்
இருப்பேன்
நீ
அணைக்கும்வரை....!!!
விதை முளைக்க
நீர், நிலம்,ஒளி
எல்லாம் வேண்டும்
கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு...!!!
உள்ளுக்குள்
நீ
இருப்பதால்
உயிரோடு
நான்
இருக்கிறேன்..!
யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக
கனவனாக..
ஏன் கடவுளாக
நான் மட்டுமே
உன் காதலாக...!!!
விலக
விலக
புள்ளிதானே..
நீ
எப்படி
விசுவரூபம்?
மெய் மறந்து
பொய் சொன்னாயா?
என்னை
காதலிக்கிறேன் என்று.
படைத்தல்
காத்தல்
அழித்தல்
கா..த...ல்..!!!
கண்னைத் திற
உலகம் தெரியும்
கண் மூடு
நான் தெரிவேன்.
பார்த்தல் பேசுதல
அணைத்தல்,
சுவைத்தல்
நீக்கியும்
நினைத்தல், நீடித்தல்
.....காதல்!
எரித்தாலோ
புதைத்தாலோ
புதையாமல்
எரிந்துகொண்டிருக்கும்
உன்
நினைவுத் தீ.!
நம்
நினைவில்
நான்..!!!
என்னை கிறுக்கனாக்கிய
கிறுக்கியே....................................
................................................................................
................................................................................
புரியுதாடி?
நான் .
. யானாலும்
நீ மட்டும் ,
கிழக்கில் விளக்காய்
நீ சிரிக்க
மேற்கில் இருட்டாய்
நான் ரசிப்பேன்!
அதெப்படி..
உள்ளில் இருக்கும் உனக்கு
உருவம் மட்டும்
தொலைவில்...!!!
அடியே..!!
’Total அம்னீசியா’ உனக்கு
‘Selective அம்னீசியா’ எனக்கு
நீ மட்டும்
நினைவில்.
என்ன எழவு விஞ்ஞானமோ?
என் Chest X-ray ல்
உன் Photo.
ரோஜா
மோதி
முள்ளுக்கு எலும்பு
முறிவு..!
காதல்
கல்யானத்தில் முடியாது
ஆமாம்,
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது.
நன்றி
கிறுக்கல்கள்
ரா.பார்த்திபன்.
22 comments:
nice boss
Very super kirukkal kavithaigal
Ur Always rocking man !!!kirukkals 😍😘
super............!!!!!!!!!!!!!
அருமை!!!
வித்தியசமான சிந்தனை வாழ்த்துகள்.
alagana kirukkalgal
Very nice super
Nice
Arpudham...... AAzhamaana Unnadhamaana Kavidhai padaippu
என் கல்லூரி காலத்தில் நான் அதிகமாக படித்தது இந்த கிறுக்கல்கள்தான்
Parthiban sir u r great poet
நன்றி.. பெருமகன் சர்...
பார்த்திபன் சர் நீங்க இன்னும் நெறைய எழுதணும் நாங்க அதை வாசிக்க காத்திருக்கிறோம்....
நீண்ட நாட்களுக்கு
பிறகு
உனது ஞாபக
கிறுக்கல்கள்!
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது..தங்கள் கிறுக்கல்கள்....இன்னும் பல kirukkalgalukaaga காத்திருக்கிறோம்...
muthalaay padithen ...mothamum padithen . . .azhagu
Super sir
Super sir
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💟💟💟💟💟💟💟💟💟😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
அருமை
கவிதை எழுதும் போது மை தீர்ந்து போனால் என்ன செய்வேன்
எழுதிய கவிதையை படிக்க தொடங்குவேன்
அது கிருக்கலாக இருந்தால் கிருக்கனாய் படிப்பேன்
விடிந்தாலும் இருலாக இருப்பேன் ...நீ நிலவாக தோன்ற........💥
கிருக்கல்கள் சிறப்பு.
Post a Comment